Posts

Showing posts from 2012

71 Into the fire –ரத்தமும் சத்தமும்....

Image
          1950.... ரத்தமும் சத்தமும் நிறைந்த போர்க்களம். பயம், கோபம், வெறி, பற்று, கையாலாகத்தனம், வீரம்,மனிதம், நம்பிக்கை எனப் பற்பல உணர்ச்சிகளும் மடியும் இடம். வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமான போரில் வட கொரியா அசுர பலத்தோடு முன்னேறிக் கொண்டிருக்க, ஆட்பலமோ ஆதரவோ இல்லாமல் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக பின்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் தொடங்குகிறது கதை. போர்க்களத்தில் இருந்து பின்னேறி வரும் கமாண்டர் கங் சக்-தே (Kang Suk-Dae), ஆட்பற்றாக்குறையாலும், மேலதிகாரிகளின் உத்தரவாலும் முக்கியக் கேந்திரமான போஹாங் பள்ளிக்கூடத்தை போர் அனுபவமோ, ஆயுதப் பழக்கமோ இல்லாத மாணவ சிப்பாய்களின் பாதுகாப்பில் விட்டு முக்கியப் போர் நடக்கவிருக்கும் நாக்டோங் நதிப்பகுதிக்கு விரைகிறார். போஹாங் பள்ளியில் நிறுவப்படும் 71 மாணவர்களில் போரை நேரில் கண்டவர்கள் மொத்தம் மூன்று பேரே. அவர்களில் ஒருவனான ஒஹ் ஜங் ப்யோம் (Oh Jung Beom) தளத்தலைவனாக கங்கால் நியமிக்கப்படுகிறான். அவனுக்கு கொடுக்கப்படும் பணியானது போஹாங் தளத்தை பாதுகாத்து முடிந்த அளவுக்கு நாக்டோக் நதியை நோக்கிய எதிரிகளின் முன்னேற்றத்தை தடுப்

Well then, let’s start at the beginning….

Image
Some good opening lines... "It was a pleasure to burn." – Fahrenheit 451. "I’m waiting. But for now…. There’s no one." – The Killer, Matz. “Everybody lies. Cops lie. Lawyers lie. Witnesses lie. The victims lie." – The Brass Verdict. "On those cloudy days, Robert Neville was never sure when sunset came, and sometimes they were in the streets before he could get back." – I am Legend, Richard Matheson. "There were these two guys in a lunatic asylum…. "– The Killing joke. "When a fresh faced guy in a Chevy offered him a lift, Parker told him to go to hell."– The Hunter, Richard Stark. "Wake up, sir. We’re here." – Sandman, Neil Gaiman. "Good evening, London. It’s nine o clock and this is the voice of fate broadcasting on…." – V for vendetta. “In a hole in the ground there lived a hobbit.” ― J.R.R. Tolkien, The Hobbit. "The moment I heard how McAra died, I should have walked away." – The Gho

The Hunter by Richard Stark…….

Image
Gritty. No other book has ever tried to convey the tone of noir in frames and succeeded like this one. The art makes the comic better than the novel.  Not to mention the fact that the comic has purged out all the unnecessary things and that makes the hero much more brutal than the novel. The art is just another kick in the gut that helps the feeling to sink in. And the color tone never fit the tone of the story better. Just a look at that bluish tone along with the pulpy page color with the mention of the word crime fiction noir makes your heart jump.  And the opening is just perfect. The first 30 or so pages is a kick ass example of how skill, tone and angles can capture a now cheesy description into pure awesomeness. The problem starts with the start of the dialogs. The story was written in 1962 and it becomes painfully apparent in some of the dialogs. The other problem comes from the story itself. Once Mal Resnick is dead, the hero (or rather, anti-hero) goes in

WESTERN - நாங்க வியாபாரிங்க இல்லீங்கோவ்….

Image
Western published in English by:  Cinebook. Link to Cinebook: http://www.cinebook.co.uk/product_info.php?products_id=4032 சில மணி நேரங்களுக்குப் பிறகு, சலூனில்.... பார்னெட் இதை எல்லாம் ப்ரோசிட்டின் கழுதை மேல இருந்த பொதியில் இருந்து எடுத்தாராம். ஏம்ப்பா, இது சட்ட விரோதமில்ல? ஓஹோ, அப்ப அவன் என் காச களவாண்டது மட்டும் எந்தக் கணக்குல சேர்த்தி? கணக்கை சரி செய்துக்குறேன்ய்யா . பார்னெட் சொல்றது சரி. தங்கம் தங்கம்னு கதை விட்டே நிறைய பேரை நைசா ஏமாத்தி போட்டுத் தள்ளிட்டான் அந்த ராஸ்கல். இந்த கோல்ட் துப்பாக்கிய பாரு. நிச்சயமா இது அவனுதில்லை. எவனோடதா இருந்துச்சோ? Blueberry published by : Dargaud. To buy Blueberry in English: http://www.graphittidesigns.com/shop/MOEBIUS-4-BLUEBERRY-Ltd.-Book-by-Charlier-and-Giraud.html Disclaimer: No copyright infringement intended. The scans are the works of fans intended for promotion and will be removed if asked to. Buy it from the publishers, if  you like it.

After the wedding - பாசமெனும் தீ…..

Image
  மும்பைப் பெருநகரின் நெடிந்துயர்ந்த கட்டடங்களின் நிழலில், இடிந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு இடையில் தொலைந்து போன தங்கள் வாழ்கையைத் தேடும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் அநாதை இல்லம் ஒன்றை நடத்திவருபவன் ஜேகப். ஜேகப்பின் அர்ப்பணிப்பும், உதவும் மனப்பான்மையும் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு சிறியது அவன் நடத்திவரும் அநாதை இல்லத்திற்கு கிடைக்கும் நன்கொடை. சிறுவர்களுக்கு அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கங்களானாலும், அடுத்த மாதத்திற்கான உணவானாலும், எப்போதுமே எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. சூறைக் காற்றில் அலைக்கழிக்கப்படும் சிறு இறகென அவர்களது வாழ்க்கை எப்போதும் தடுமாற்றத்தில் இருந்தாலும், குழந்தைகளுக்கேயுன்டான மகிழ்ச்சியும், ஜேகப் மீதான நம்பிக்கையுமே அவர்களது தடம் புரண்ட வாழ்கையில் தெரியும் சிற்றொளி. வருமானமின்மையின் காரணமாக அநாதை இல்லத்தை இழுத்து மூடும் நிலை அருகாமையில் தெரிந்தாலும் சளைக்காது போராடும் ஜேகப்பிற்கு உரிய நேரத்தில் உதவி செய்ய முன்வருகிறது ஒரு டேனிஷ் நிறுவனம். ஜேகப் நடத்தும் இல்லத்திற்கு பணவுதவி செய்ய முன்வரும் அந்த நிறுவனம், தங்களது நிறுவனத்தின் நிர்வாகி யோர்கன் ஹான்சன்

கடல்புறா 3 – புயல் விடு தூது....

Image
      ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான். அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்தப்படுத்த விரு

கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….

Image
                                                                                      தழுவி நழுவும் கடல் அலையோ                                                          தூரத் தெரியும் கல் மலையோ?     அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷயமுனையின் கரைகளை வேண்டியே நெருங்கும் கப்பலை கவனித்துக் கொண்டிருந்தான். வந்தால் விளையப் போகும் நிகழ்வுகளை விளக்கும் எண்ணத்திலோ என்னவோ செங்கதிர்களை அந்தக் கப்பலின் மீது நின்று கொண்டிருந்த உருவத்தின் மீதும் பாய்ச்சினான். தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனது விழிகள் கரையை விழுங்கி விடும் கழுகுப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன. தூரத் தெரியும் தூங்கும் எரிமலையான பகிட் பாரிசானின் உக்கிரமோ, விலகி ஓட நினைப்பன போல பறந்து செல்லும் பறவைகளோ அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை. அப்பிராந்தியத்திலேயே பயங்கரமான இடம் என அக்ஷயமுனை பெயர் பெற்றிருந்ததென்றால் அதற்கு காரணம் இருக்கவே செய்தது. நிலைமை எப்போதும் வெடிக்கத் தயாராயிருக்கும் பகிட் பாரிசனுக்கு ஒப்பானதே என்பது மட்டுமல்லாது, நர மாமிசம் தின்னும் பூர்வ குடிகளையும், கொ

கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...

Image
    “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ”                                 -கலிங்கத்துப்பரணி. பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட.. மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்.. காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை. தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, தப்பிக்க வழி தேடும் அவன் மாளிகை ஒன்றினுள் பதுங்குகிறான்.  இளைய பல்லவனது ஆசை தப்பிப்பதில் இருந்தாலும், விதி அவனை மாட்டிவிடவே வழி செய்கிறது. காவலர்களின் கூர்வேல்களில்